Latest topics
» சிந்தனை கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
நெடு நாளைய நண்பர்; நெருக்கமான நண்பர்ன்னு
சொல்றீங்க; ஆனா, சந்திச்சு, ஐஞ்சு வருஷம்
ஆச்சுங்கிறீங்களே…’
‘ஆமா… எங்க நேரம் இருக்கு…’
‘வயசான அத்தை; ரொம்ப பாசமா இருப்பாங்க;
ஊர்ல இருக்காங்க; பாக்க போகலாம்ன்னா, முடியவே
மாட்டேங்குது…’
‘கூடப் படிச்சவன்; இப்ப மாவட்ட பதிவாளனா, பதவி
உயர்வு பெற்றுட்டான்; வாழ்த்த கூட முடியல; மறதி,
வேலை மிகுதி…’
– இப்படிப்பட்ட வாக்கியங்களை, பலர் பேச
கேட்டிருப்பீர்கள்; ஏன், நீங்களே கூட, இப்படி சொல்லி
இருக்கலாம்.
மேலே கூறப்பட்டவற்றில், சந்திப்பதற்கு தடையாக
சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் சாக்கு, போக்குகளே
தவிர, வேறு அல்ல.
வாழ்க்கையில், வெற்றிக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கிறோம் என்பதை ஒட்டியே, நம் வாழ்வின்
நிகழ்வுகள் அர்த்தமுள்ளவைகளாக மாறுகின்றன.
வீடு, குடும்பம், தொழில், வேலை, வருமானம் மற்றும்
சவுகரியம் என வாழ்கிறவர்கள், வாழ்வின், சில
இனிமையான பக்கங்களை இழக்கின்றனர் என்பேன்.
நெடுநாள் நண்பருடன் சேர்ந்து, அரட்டை அடிக்கும்
மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இந்த மகிழ்வின்
அளவீடுகளை அளக்க, உலகில் எந்தவொரு கருவியும்
கிடையாது. இந்த மகிழ்ச்சியான கணங்கள், வாழ்வில்
ஏனோ புதைத்து வைக்கப்பட்ட, புதையலாகவே இருந்து
விடுகின்றன.
இவை, வெளிவருவதோ, பயன்படுவதோ இல்லை.
–
அந்த அத்தை காட்டும் பாசத்தின் அளவு, உள்ளத்தில்,
அடித்தளத்திற்கு போகும் போது, வாழ்வில் எவ்வளவு
நெகிழ்ச்சியான கணங்கள் இருக்கின்றன என்பதை,
அழகாக உணர்த்தும். புது உறவுகள் பலரது பாசங்கள்,
மேலோட்ட மானவையாகவும், பாசாங்காகவும் இருப்பதை
நம்மால்,நன்கு உணர முடியும்.
–
கூட படித்தவருடன் நடத்தும், ‘வாடா… போடா…’
உரையாடல்களில், சற்றும் செயற்கைத்தனம் கிடையாது.
பழைய நினைவுகளில் மூழ்கி, காக்காய்க்கடி கமர்கட் வரை
இறங்கினால், உள்ளத்தில் ஏற்படும் பரவசத்திற்கு ஈடு
இணை இல்லை.
–
புதிய நட்புகளில் பல, நம்மை எப்படி பயன்படுத்திக்
கொள்ளலாம்; ‘இவனால், என்ன பயன்…’ என்று லாப, நஷ்ட
கணக்கு போட்டு பார்க்கிறது.
–
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவ்வப்போது
ஒரு, ‘ஹலோ…’ சொல்லி வைக்க வேண்டும். கடிதம்,
மின்னஞ்சல் மற்றும் நேரில் என, எது சாத்தியப்படுகிறதோ,
அதை செயல்படுத்த வேண்டும்.
–
‘ரொம்ப பாசமானவர், அன்பானவர், நட்பிற்கு நல்ல
முக்கியத்துவம் தருபவர்…’ என்று, நம் வட்டத்தில்
பெயரெடுக்க, இச்செயல் மிக உதவும்.
–
மாறாக, ‘இது சோழியன் குடுமி; சும்மா ஆடாது!’ என்கிற
பழமொழிக்கு, நாமே இலக்கணமாகி விடக் கூடாது.
சொல்றீங்க; ஆனா, சந்திச்சு, ஐஞ்சு வருஷம்
ஆச்சுங்கிறீங்களே…’
‘ஆமா… எங்க நேரம் இருக்கு…’
‘வயசான அத்தை; ரொம்ப பாசமா இருப்பாங்க;
ஊர்ல இருக்காங்க; பாக்க போகலாம்ன்னா, முடியவே
மாட்டேங்குது…’
‘கூடப் படிச்சவன்; இப்ப மாவட்ட பதிவாளனா, பதவி
உயர்வு பெற்றுட்டான்; வாழ்த்த கூட முடியல; மறதி,
வேலை மிகுதி…’
– இப்படிப்பட்ட வாக்கியங்களை, பலர் பேச
கேட்டிருப்பீர்கள்; ஏன், நீங்களே கூட, இப்படி சொல்லி
இருக்கலாம்.
மேலே கூறப்பட்டவற்றில், சந்திப்பதற்கு தடையாக
சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம் சாக்கு, போக்குகளே
தவிர, வேறு அல்ல.
வாழ்க்கையில், வெற்றிக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கிறோம் என்பதை ஒட்டியே, நம் வாழ்வின்
நிகழ்வுகள் அர்த்தமுள்ளவைகளாக மாறுகின்றன.
வீடு, குடும்பம், தொழில், வேலை, வருமானம் மற்றும்
சவுகரியம் என வாழ்கிறவர்கள், வாழ்வின், சில
இனிமையான பக்கங்களை இழக்கின்றனர் என்பேன்.
நெடுநாள் நண்பருடன் சேர்ந்து, அரட்டை அடிக்கும்
மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இந்த மகிழ்வின்
அளவீடுகளை அளக்க, உலகில் எந்தவொரு கருவியும்
கிடையாது. இந்த மகிழ்ச்சியான கணங்கள், வாழ்வில்
ஏனோ புதைத்து வைக்கப்பட்ட, புதையலாகவே இருந்து
விடுகின்றன.
இவை, வெளிவருவதோ, பயன்படுவதோ இல்லை.
–
அந்த அத்தை காட்டும் பாசத்தின் அளவு, உள்ளத்தில்,
அடித்தளத்திற்கு போகும் போது, வாழ்வில் எவ்வளவு
நெகிழ்ச்சியான கணங்கள் இருக்கின்றன என்பதை,
அழகாக உணர்த்தும். புது உறவுகள் பலரது பாசங்கள்,
மேலோட்ட மானவையாகவும், பாசாங்காகவும் இருப்பதை
நம்மால்,நன்கு உணர முடியும்.
–
கூட படித்தவருடன் நடத்தும், ‘வாடா… போடா…’
உரையாடல்களில், சற்றும் செயற்கைத்தனம் கிடையாது.
பழைய நினைவுகளில் மூழ்கி, காக்காய்க்கடி கமர்கட் வரை
இறங்கினால், உள்ளத்தில் ஏற்படும் பரவசத்திற்கு ஈடு
இணை இல்லை.
–
புதிய நட்புகளில் பல, நம்மை எப்படி பயன்படுத்திக்
கொள்ளலாம்; ‘இவனால், என்ன பயன்…’ என்று லாப, நஷ்ட
கணக்கு போட்டு பார்க்கிறது.
–
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அவ்வப்போது
ஒரு, ‘ஹலோ…’ சொல்லி வைக்க வேண்டும். கடிதம்,
மின்னஞ்சல் மற்றும் நேரில் என, எது சாத்தியப்படுகிறதோ,
அதை செயல்படுத்த வேண்டும்.
–
‘ரொம்ப பாசமானவர், அன்பானவர், நட்பிற்கு நல்ல
முக்கியத்துவம் தருபவர்…’ என்று, நம் வட்டத்தில்
பெயரெடுக்க, இச்செயல் மிக உதவும்.
–
மாறாக, ‘இது சோழியன் குடுமி; சும்மா ஆடாது!’ என்கிற
பழமொழிக்கு, நாமே இலக்கணமாகி விடக் கூடாது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7658
Re: ‘உள்ளேன் ஐயா’ சொல்வதில் உள்ள நன்மைகள்!
கடந்த மாதம், ஒரு திருமணத்தில், காவல் துறை அதிகாரி
ஒருவர் அறிமுகமானார். ‘இந்தப் பக்கமா வந்தேன்; மரியாதை
நிமித்தமா உங்கள பாக்க வந்தேன்; விஷயம் ஒன்றுமில்லை;
போயிட்டு வர்றேன்…’ என, இரண்டு நிமிடத்தில்,
இருக்கையை காலி செய்தால், அவரிடமிருந்து, ஒரு வாக்கியம்
கண்டிப்பாக வரும்…
‘காவல் துறை விஷயமா, என்னன்னாலும் சொல்லுங்க;
நான் இருக்கேன், பாத்துக்கிறேன்…’
–
இதற்கு தான், ‘உள்ளேன் ஐயா சொல்லி வைக்க வேண்டும்’
என்கிறேன். இதில், சரிவர நடந்து கொண்டால், நாளை எதற்கும்,
எவரிடமும் நம்பி போய் நிற்கலாம்.
–
‘காரியம்ன்னா மட்டும் வருவார்; இல்லன்னா கண்டுக்கவே
மாட்டார்…’ என்கிற பெயரை மட்டும் ஒருபோதும் எவரும் எடுத்து
விடக் கூடாது.
–
———————————–
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
ஒருவர் அறிமுகமானார். ‘இந்தப் பக்கமா வந்தேன்; மரியாதை
நிமித்தமா உங்கள பாக்க வந்தேன்; விஷயம் ஒன்றுமில்லை;
போயிட்டு வர்றேன்…’ என, இரண்டு நிமிடத்தில்,
இருக்கையை காலி செய்தால், அவரிடமிருந்து, ஒரு வாக்கியம்
கண்டிப்பாக வரும்…
‘காவல் துறை விஷயமா, என்னன்னாலும் சொல்லுங்க;
நான் இருக்கேன், பாத்துக்கிறேன்…’
–
இதற்கு தான், ‘உள்ளேன் ஐயா சொல்லி வைக்க வேண்டும்’
என்கிறேன். இதில், சரிவர நடந்து கொண்டால், நாளை எதற்கும்,
எவரிடமும் நம்பி போய் நிற்கலாம்.
–
‘காரியம்ன்னா மட்டும் வருவார்; இல்லன்னா கண்டுக்கவே
மாட்டார்…’ என்கிற பெயரை மட்டும் ஒருபோதும் எவரும் எடுத்து
விடக் கூடாது.
–
———————————–
லேனா தமிழ்வாணன்
வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7658
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum